வெளிச்சக் கீற்றுடன் வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்
மழை நேரத்தில் பிட்சை பாதுகாக்க பிசிசிஐ தவறியதால் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த கவுஹாத்தி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெறவிருந்த இந்தியா -இலங்கை இடையிலான முதல் சர்வதேச டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
Guwahati, you beauty ????#INDvSL pic.twitter.com/QuZAq7i1E3
— BCCI (@BCCI) January 5, 2020
ஆட்டம் துவங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. ஆயினும் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், தங்கள் கைகளில் இருந்த செல்போன் விளக்குகளை எரியவிட்டு, வந்தே மாதரம் பாடலை பாடியது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.






